Monday, December 31, 2007

Kannadasan - An Interesting Piece of Information

Date: 01.01.2008

Today I wish to share an interesting piece of information with you all on Kannadasan(1927 - 1981). For the sake of non-Tamilians, let me give a small introduction on him. He is a famous Tamil cine lyricist of yesteryears. He has penned several thousand Tamil cine lyrics. I won't be justified, if I refrain from mentioning his multi-faceted personality. Apart from penning poetry, he has also penned several Tamil short stories, dramas, essays and has also acted in and produced some Tamil movies. One ironical thing which everyone should note here is that eventhough he was a drop-out in middle school, his writings were equivalent to that of an erudite. The following piece of information is actually an epitome of the irony. Long time back, I came across it in a Tamil weekly.

Let me start narrating it to you all now:

Once the daughter of the reknowned English poet William Wordsworth (referred to as Nature Poet and he was the one who said that poetry is a spontaneous over flow of powerful feelings), who herself was a poetess paid a visit to Chennai and was staying in a star hotel. Kannadasan, who came to know about her presence in Chennai, wanted to call on her at the hotel. Consequently he went to the hotel but there he was denied permission to meet the distinguished guest by the authorities of the hotel. Kannadasan then kindly requested one of the room boys to just hand over a bit of paper, in which he wrote something in English for her, and get back to him with her response post that.

The room boy obliged to do so and after the poetess went through the contents in the paper, she forced the room boy to take her to Kannadasan. The conversation between the English poetess and the Tamil poet then lasted for hours together. Can any one guess what there was in the paper which forced the English poetess to meet Kannadasan? It is as under:

"An Outstanding Tamil Poet is Standing Outside"

திருவாசகம் - புகழ் மாலை

நாள்: 31.12.2007

திருவாசகம் என்றவுடன் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும் தொடர் யாதெனின், "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்".

பள்ளியறையில் திருவாசகத்தினைப் பயின்ற அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் அவர்கள் அதன் சிறப்பினை எவ்வாறு கூறுகிறார் என்று இவண் காண்போம்.

வான் கலந்த மாணிக்க வாசக
நின் வாசகத்தை நான் கலந்து
பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து
ஊன் கலந்தென் உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பதுவே!


மாணிக்க வாசக நின்
வாசகத்தை நான் கலந்து
பாடுங்கால் ஆங்கிருந்த கீழ்ச்சாதி
பறவைகளும் வேட்டமுறும் பொல்லா
விலங்குகளும் மெய்ஞான நாட்டமுறும்
எனில் நானடைதல் வியப்பன்றே


நான் இத்திருவாசகத்தினைப் படித்துப் பயன்பெறும் அளவிற்குத் தமிழில் புலமைப் பெறவில்லை!

ஓர் எழுத்து ஒரு மொழி

நாள்: 31.12.2007

நம் தாய் மொழியாகிய நற்றமிழில் மொத்தம் நாற்பத்திரண்டு ஓர் எழுத்து ஒரு மொழிகள் (ஓர் எழுத்துச் சொற்கள்) உள்ளன. அவற்றில் நான் நன்கு அறிந்தவற்றை இவண் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். அவை பின் வருமாறு:


* ஆ - பசு

* ஐ - எண் ஐந்து

* ஓ - வியப்பு

* கா - சோலை

* பூ - மலர்

* கோ - அரசன்

* போ - செல்

* நொ - துன்பம்

* கை - உறுப்பின் பெயர்

* தை - மாதம் மற்றும் தையல் தொழில் இரண்டையும் குறிக்கும் சொல்

* பை - பெயர்ச்சொல்

* மை - அழகுப் பொருள்

* வை - இடு

* மா - பழத்தின் பெயர் மற்றும் "பெரிய"

* பா - பாடல்

* ஈ - ஒரு வகைப் பூச்சி

* தா - கொடு

* வா - வருதல்

* நா - உடல் உறுப்பு

* சீ - இழிச் சொல்

* தூ - இழிச் சொல்

* தீ - நெருப்பு

* நீ - முன்னிலைப் பெயர்ச் சொல்

* மூ - எண் மூன்று

மீதம்முள்ள சொற்களைத் தாங்கள் அறிவீராயின் தயக்கம் ஏதுமின்றி எனக்குத் தெரியப்படுத்துமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - மாணிக்கவாசகர்

ஒரு நாள் ஒரு குறள்

நாள்: 31.12.2007

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் உலகு


(நெருநல் - நேற்று)

பொருள்: இவ்வுலகத்தின் பெருமை யாதெனின் நேற்று உயிருடன் இருக்கும் ஒருவர் இன்று இருக்கமாட்டார் என்பதேயாகும்

(இத்திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்தத் திருக்குறள்களில் ஒன்றாகும். உலக நிலையாமையினை வள்ளுவப் பெருந்தகையவர்கள் ஒன்றரை அடியில் விளங்க வைத்துவிட்டார்கள்)

Sunday, December 30, 2007

Dissolution of Gold in Aqua Regia

Date: 31.12.2007

Here I wish to explain how the so called noble metal gold dissolves in Aqua regia. Aqua regia is a mixture of 3 parts of concentrated HCl and one part of concentrated HNO3. Aqua regia is supposed to be the best and also the only solvent for gold.

The dissolution of the noble metal gold occurs by the formation of a square planar complex between gold and chloride ions. The name of the complex is Hydrogen tetrachloroaurate(III). The stoichiometry of the reaction is as under:

3AuCl3 + HNO3 +3HCl -----------> 3H[Au(Cl)4] + 2H2O + NO

Aqua regia also solublises other metals like silver, nickel, cobalt etc.

Friday, December 7, 2007

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு - தமிழில்

நாள்: 07.12.2007

பின் வரும் சிறுகதையானது பிரபல அமெரிக்க ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளராகிய ஒ. என்ரி என்றழைக்கப்படும் வில்லியம் சி்ட்னி போர்ட்டர் என்பவரால், "After Twenty Years" என்னும் தலைப்பில் எழுதப்பட்டதாகும். இச்சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த ஆங்கிலச் சிறுகதையாகும். அதனை இவண் தமிழில் காண்போம்.

ஒரு நாள் ஒரு காவலர் நியு யார்க் நகர வீதிகளில் இரவு பத்து மணி அளவிற்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அவர் பூட்டப்பட்ட கடையின் முன் ஒரு மனிதன் நிற்பதைக் கண்டார். அவனிடம் சென்று அவன் எதற்காக கொட்டும் பனியையும் பொருட் படுத்தாமல் அங்கு நின்றுக் கொண்டிருந்தான் என்று வினவினார்.

அதற்கு அம்மனிதன் தன் பெயர் பாப் என்றுக் கூறி புகைக் குழாயினைப் பற்ற வைத்தான். அதில் அவன் முகத்தினைக் காவலரால் காண முடிந்தது. அவன் முகத்தைக் கண்ட அவர் அவன் ஒரு பெரிய பணக்காரனான இருக்க வேண்டும் என்பதனை அவன் அணிந்திருந்த உடை மற்றும் கணையாழியின் மு°லம் ஊகித்துக் கொண்டார். பிறகு அவன் அவரிடம் பின்வருமாறு கூறினான்:

"நானும் ஜிம்மி வெல்சும் உற்ற நண்பர்கள். எங்கள் இருவரைப் போன்ற உற்ற நண்பர்களை எங்கும் காண இயலாது. எங்களுக்குள் மனக் கசப்பு என்றும் ஏற்பட்டதே கிடையாது. இருபது ஆண்டுகளுக்கு முன் நான் பதினெட்டு அகவை நிரம்பிய வாலிபனாக இருந்தேன். என் நண்பன் ஜிம்மி வெல்சு இருபது அகவை நிரம்பிய வாலிபனாக இருந்தான். நாங்கள் இருவரும் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளில் இதே இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டோம். அதன் படி சரியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நாம் இருவரும் உயிரோடு இருந்தால், நாம் எங்கு இருந்தாலும் எவ்வளவுத் தொலைவில் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் இதே இடத்தில் இதே நேரத்தில் ஒருவரை யொருவர் சந்திக்க வேண்டும். இன்று அந்நாளாகும். நாங்கள் இருவரும் இதே இடத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் இரவு பத்து மணியளவிற்கு அவ்வாறு ஒப்பந்தம் செயதுக் கொண்டு பிரிந்துச் சென்றோம்".

அவர் பாபிடம், ஜிம்மி வெல்சுடன், பிரிந்துச் சென்ற பிறகு அவன் தொடர்பு ஏதாவது வைத்திருந்தானா என்று வினவினார். அதற்கு அவன் அவர்கள் இருவரும் பிரிந்துச் சென்றவுடன் அவன் பிழைப்புத் தேடி மேற்கு நோக்கிச் சென்றதாகவும் ஆனால் ஜிம்மி வெல்சு மட்டும் நியு யார்க் நகரிலேயே இருந்து விட்டதாகவும் கூறினான். மேலும், பிரிந்துச் சென்ற பின் ஓரிரு ஆண்டுகள் வரை மட்டும் அவர்கள் இருவருக்குமிடையில் தொடர்பு இருந்ததாகவும் கூறினான்.

காவலர் மணி பத்தைக் கடந்து விட்டதாகவும் இனியும் அவன் நண்பன் ஜிம்மி வெல்சு அங்கு வருவான் என்ற நம்பிக்கை அவனிற்கு உள்ளதா என்று வினவினார். அதற்கு பாப், "என் நண்பன் ஜிம்மி உயிருடன் இருந்தால் தவறாமல் என்னைக் காண வருவான்" என்றான். பிறகு அடுத்த அரை மணி நேரம் வரை தன் ஜிம்மிக்காக காத்திருக்கப் போவதாகவும் கூறினான். பிறகு காவலர் அவனிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டார்.

பாப் தன் உயிர்த் தோழன் ஜிம்மிக்காக ஆவலுடன் ஒவ்வொரு நிமிடமாகக் காத்திருந்தான். சற்று நேரத்தில் ஒரு உயரமான மனிதன் தலையில் தொப்பியுடனும் உடம்பில் குளிர்கால உடையுடனும் எதிரில் வந்துக் கொண்டிருந்நதான். அவன் அவ்வாறு வந்துக் கொண்டிருக்கையில் பாப்பை நோக்கி, "அது நீ தானா பாப்?" என்று வினவினான். பாபும் உடனே, "யார் ஜிம்மியா?" என்று வினவினான். பிறகு இருவரும் உள்ளக் களிப்பில் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அந்த இருபது ஆண்டு இடைவெளியில் ஜிம்மி சற்று உயரமாகி விட்டதாக பாப் கூறினான். மகிழ்ச்சிக் களிப்பில் ஒருவரைப் பற்றி ஒருவர் உசாவிக் கொண்டு சிறிது தொலைவு நடந்து வந்நனர்.

ஒரு கடையின் அருகில் வந்தவுடன் அங்கிருந்த வெளிச்சத்தில் ஜிம்மியின் முகத்தைக் கண்டு பாப் திடுக்கிட்டான். தன்னுடன் இருப்பவன் தன்னுடைய உற்ற நண்பன் ஜிம்மி இல்லை என்பதனை அவன் உணர்ந்தான். பிறகு அவனின் கையை விலக்கி விட்டு, "இருபது ஆண்டு கால இடைவெளியில் ஒரு மனிதன் சற்று உயரமாவதற்கு வாய்ப்பு இருக்கிறதென்றும் ஆனால் ஒரு மனிதனுடைய மு°க்கின் புறத் தோற்றம் முழுமையாக மாறும் அளவிற்கு அஃதொன்றும் பெரிய இடைவெளி இல்லை" என்றும் கூறினான்.

உடனே பாபுடனிருந்த அந்த மனிதன் பத்து நிமிடங்களுக்கு முன் பாப்பை அவன் சிறைப் பிடித்து விட்டதாகக் கூறினான். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட பாபிடம் அவன் ஒருத் தாளினைக் கொடுத்தான். அத்தாளில் பின் வருமாறு எழுதியிருந்தது:

"பாப் குறித்த நேரத்தில் நான் அங்கு வந்திருந்தேன். நீ உன் புகைக் குழாயினைப் பற்ற வைத்த போது உன் முகத்தினை என்னால் நன்கு காண முடிந்தது. மேலும், அம்முகமே நியு யார்க் நகர காவலர்களால் பெரிதும் தேடப்படும் முகம் என்பதனையும் உணர்ந்தேன். ஆனால், என்னால் அதைச் செய்ய இயலவில்லை அதனால் தான் என்னுடன் பணிபுரிபவரை அதனைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டேன் - ஜிம்மி வெல்சு"

இதனைப் படித்து முடித்தவுடன் பாபின் கை நடுங்கியது.

எனக்குப் பிடித்த புறநானூற்றுப் பாடல்

நாள்: 07.12.2007

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவரால்
எல்லார்க்கும் பெய்யும் மழை

Tuesday, December 4, 2007

A Fantabulous Saying

Date: 05.12.2007

It is the attitude and not the aptitude that decides the altitude of a person

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

  Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil ...