Sunday, January 20, 2008

தமிழர்களே! இலங்கை அரசு வானூர்திகளைப் புறக்கணியுங்கள்

நாள்: 21.01.2008

நான் 17.01.2008 நாளிட்ட "தி இந்து" ஆங்கில நாளிதழில் கீழ்காணும் செய்தியினைப் படிக்க நேர்ந்தது. அதில் இலண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டமைப்பின் தலைவரான இவான் பெத்ரோபிள்ளை என்பவர் பின்வருமாறு அறிக்கைவிடுத்திருந்தார்:

"தமிழர்கள் அனைவரும் இலங்கை அரசால் இயக்கப்படும் வானூர்திகளைப் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில், இலங்கை அரசு வானூர்திகளை நம்மைப் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களே பெருமளவில் பயன்படுத்துகின்றனர். அதனால் இலங்கை அரசிற்கு ஓர் ஆண்டிற்குத் தமிழர்கள் ஈட்டித்தரும் வருவாய் 1,20,00,000 பவுண்டுகளாகும்(12 million pounds). தமிழர்களால் அடையும் இவ்வருவாயினை அவர்கள் தமிழர்களை அழிப்பதற்கே பயன்படுத்துகின்றனர். மேலும், இலங்கைக்குச் சுற்றுலா பயணம் செல்வதையும் தவிர்ப்பீராக".

நான் தற்போது என்ன வேண்டுகோள் விடுக்க விழைகிறேன் என்றால் இந்தியத் தமிழர்களாகிய நாமும் நம் இலங்கைத் தமிழ் உடன்வயிற்றோர்களுக்கு(சகோதரர்களுக்கு) கை கொடுப்போம். நம்மில் பலர் சில ஆயிரம் ரு°பாய்களைச் சேமிக்கும் பொருட்டு, சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் பல ஆசிய நாடுகளுக்குச் செல்லும்போது இலங்கை அரசு வானூர்திகளைப் பயன்படுத்துகின்றோம். இனி, அதனை முற்றிலும் தவிர்த்து நம் இந்திய அரசு வானூர்திகளையே பயன்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதனால் நாம் நம் தமிழ் இனத்தை காப்பது மட்டுமின்றி நம் அரசிற்கும் பெருத்த வருவாயினை ஈட்டித்தருகிறோம். தமிழர்கள் அனைவரும் இதில் தன்னல நோக்குடன் செயல்படாமல் பொதுநல நோக்குடன் செயல்படுதல் சாலச் சிறந்ததாகும்.

நம் இலங்கைத் தமிழ் உடன்வயிற்றோர்களின் நலனிற்காக நாம் அனைவரும் ஒன்று கூடி அறவழியில் இச்சிறு உதவியினை உளமாரச் செய்வோமாக!

அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

Wednesday, January 9, 2008

பேரறிஞர் அண்ணாவின் அரசியல் நையாண்டி

நாள்: 09.01.2008

கீழ்க்காணும் அரசியல் நையாண்டி என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய என் தந்தை அவர்களிடம் நான் கேட்டு மிகவும் வியந்த ஒன்றாகும். அதனை இவண் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன்.

1967ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்திருந்த நேரத்தில் ஒரு காங்கிரசுக் கட்சி ஆதரவு இதழில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கேலி ஓவியம்(Cartoon) ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அக்கேலி ஓவியத்தில் அண்ணா அவர்கள் கழுதையின் மீது ஏறிச் சென்று கோட்டையைக் கைப்பற்றுவதாக வரையப்பட்டிருந்தது.

இதனைப் பற்றி அண்ணாவின் கருத்து என்னவென்று அவரிடம் இதழியலாளர்கள்(Journalists) வினவியபோது, அண்ணா உடனே பின்வருமாறு பதிலளித்தார்:

"நான் இது நாள் வரை கோட்டையைக் கைப்பற்றுவது ஒரு கடினமானச் செயல் என்றே கருதியிருந்தேன். ஆனால், காங்கிரசு நண்பர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை கழுதை மேல் ஏறிச் சென்றாலே போதும் எளிதில் கோட்டையைப் பிடித்து விடலாமென எனக்கு இக்கேலி ஓவியத்தின் மு°லம் தெரிவித்துவிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!"

Monday, January 7, 2008

Dr. C. N. Annadurai at Yale University

Date: 08.01.2007

Let us see an interesting information on, one of the erstwhile chief ministers of the state of Tamil Nadu in India, Dr. C. N. Annadurai(15.09.1909 - 03.02.1969).

Dr. C. N. Annadurai, commonly referred to as Anna by Tamil speaking community, founded the most famous Dravidian party, Dravida Munnetra Kazhagam(DMK), in the year 1949. He served as the chief minister of Tamil Nadu from 1967 - 1969. He held M. A.(Hons.) in Economics. He was a multi-faceted personality. He was a politician, erudite, diplomat, playwright, short-story writer, stage artist and so on and so forth.

He was a great orator. I even feel like genuflecting before his eloquence. Let me now narrate the following interesting information on Dr. C. N. Annadurai. Once in Yale University, USA, the following question was posed to the silver-tongued personality by a native speaker of English:

Can you construct a sentence in English by using because three times in it?

The instantaneous response from Dr. C. N. Annadurai was:

No sentence ends in because, because, because is a conjunction

Tuesday, January 1, 2008

தமிழ் எண்களை அறியாத் தமிழர்கள்

நாள்: 07.01.2008

தமிழ் மொழியினைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் எத்துணைப் பேர் தமிழ் மொழியில் எண்கள் உள்ளன என்பதனை அறிவர்? அப்படியே தமிழில் எண்கள் உள்ளன என்னும் தகவலினை அறிதவர்களில் எத்துணைப் பேர் அவ்வெண்களை அறிவர்?

தமிழகத்தின் அண்டை மாநிலம் ஒன்றில் வாழும் தமிழ்ப் பெண்ணான நான் நாள் தோறும் நான் வாழும் நகரத்தில் ஓடும் மாநகரப் பேருந்துகளைக் காணும் போது அப்பேருந்துகளின் பெயர் மற்றும் எண்களைத் தாங்கி வரும் ஒவ்வொரு பலகையிலும் பேருந்துகளின் எண்கள் அம்மாநிலத்தின் ஆட்சி மொழியிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறேன்.

ஆதலால், அம்மொழியினை முறையாகக் கற்காத வெளிமாநிலத்துப் பெண்ணான என்னால் கூட அம்மொழியிலுள்ள எண்கள் அனைத்தையும் எளிதில் கற்க இயன்றது.

மேலும் எனக்குத் தெரியவந்த மற்றுமொருத் தகவல் யாதெனின் இம்மாநில மொழியினைப் பயிலும் பிள்ளைகள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி நிலையிலேயே அம்மொழியின் எண்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு நிலைமை இவ்வாறு இருக்க நல்ல கல்வி அறிவு பெற்றத் தமிழர்கள் கூட தமிழில் எண்கள் உள்ளன என்னும் அடிப்படைத் தகவிலினைக் கூட அறியாமல் உள்ளனர்!!

நான் தொடக்கப் பள்ளியிலிருந்து இளம் அறிவியல் இரண்டாம் ஆண்டு வரை முறையாகத் தமிழ்ப் பயின்றேன். ஆயினும் நான் தமிழ் எண்களை எந்தத் தமிழ் ஆசிரியரிடமோ அல்லது பேராசிரியரிடமோ கற்கவில்லை. நான் என் விடா முயற்சியாலும் கடவுளின் நல்லருளாலும் நூலக நூல்கள் மு°லமே அவற்றை அறிந்துக் கொண்டேன்.

இந்நேரத்தில் என்னை மிகவும் வேதனை அடைய வைத்த ஒருத் தகவலினை நான் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். என்னுடன் பணிபுரியும் வேதியியலில் பண்டாரகர் பட்டம் பெற்றத் தமிழர் ஒருவர் வேற்று மொழியினைத் தாய் மொழியாகக் கொண்ட மற்றுமோர் உடன் பணிபுரிபவரிடம் பின் வருமாறு ஒரு முறைக் கூறினார்:

"உங்கள் மொழியில் உங்கள் மொழிக்கென உரிய எண்கள் உள்ளன. ஆனால், மிகவும் பழைமையான, சிறந்த இலக்கிய வளமுள்ள மொழியாகப் போற்றப் படும் எங்கள் தமிழ் மொழியிலோ அவ்வாறு ஏதுமில்லை!".

பின் அத்தமிழரிடம், அவருக்குக் கீழ் பணிபுரியும், நான் எடுத்துக் கூறி அவ்வெண்களை அவருக்கு அறிமுகமும் செய்து செய்தேன்.

தமிழகத்திலேயே நம் மொழியின் இந்த அவல நிலையினை என்னென்று சொல்வது? இந்தியா விடுதலை அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதுவரை தமிழகத்தை ஆண்ட ஓர் அரசும் இதைப் பற்றி எவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் இருந்தது?

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் தான் என்ன? தமிழ் எண்கள் வெறும் சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு மட்டும் தானா? மேலும், தமிழ் மொழியினைத் தட்டச்சு செய்ய உதவும் இணையத்தளங்கள் பலவற்றிலும் தமிழ் எண்களுக்கென விசைகள் கிடையாது. தமிழ்த் தட்டச்சினை முறையாகப் பயின்ற நான் என்றுமே தமிழ்த் தட்டச்சுப் பொறிகளில் தமிழ் எண்களைத் தட்டச்சு செய்வதற்குரிய விசைகளை கண்டதில்லை!

எண்ணும் எழுத்தும் கண் என்கிறது உலகப் பொது மறை

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

  Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil ...