Monday, December 31, 2007

திருவாசகம் - புகழ் மாலை

நாள்: 31.12.2007

திருவாசகம் என்றவுடன் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும் தொடர் யாதெனின், "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்".

பள்ளியறையில் திருவாசகத்தினைப் பயின்ற அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் அவர்கள் அதன் சிறப்பினை எவ்வாறு கூறுகிறார் என்று இவண் காண்போம்.

வான் கலந்த மாணிக்க வாசக
நின் வாசகத்தை நான் கலந்து
பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தீஞ்சுவைக் கலந்து
ஊன் கலந்தென் உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பதுவே!


மாணிக்க வாசக நின்
வாசகத்தை நான் கலந்து
பாடுங்கால் ஆங்கிருந்த கீழ்ச்சாதி
பறவைகளும் வேட்டமுறும் பொல்லா
விலங்குகளும் மெய்ஞான நாட்டமுறும்
எனில் நானடைதல் வியப்பன்றே


நான் இத்திருவாசகத்தினைப் படித்துப் பயன்பெறும் அளவிற்குத் தமிழில் புலமைப் பெறவில்லை!

No comments:

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

  Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil ...