Thursday, November 30, 2017

ஆடம்பரமின்றி அண்ணாமலையானை வணங்க வேண்டும்

திருஞானசம்பந்த பெருமான் தம்முடைய மு°ன்றாம் அகவையிலிருந்தே சிவத்தொண்டு புரியும் பொருட்டு பல்வேறு சிவன் கோயில்களுக்குத் தம் தந்தையார், சிவபாதயிருதயர், அவர்களின் தேளில் பயணம் செய்தும், தாமே காலால் நடந்தும் சென்றார்கள். முற்றிலும் ஞானம் பெற்ற அருட் குழந்தையான திருஞானசம்பந்தரின் பிஞ்சுக் கால்கள் அல்லலுறுவது கண்டு இறைவன் தாமே சிவகனங்களிடம் திருஞானசம்பந்தர் பயணம் செய்வதற்காக முத்துப் பல்லக்கினை பரிசாக அளித்தார்.

இறைவன் அளித்த முத்துப் பல்லக்கினால் திருஞானசம்பந்தர் பல திருக்கோயில்களுக்குச் சென்று இறைவனைப் போற்றி தேனினும் இனிய தேவாரப் பாடல்களைப் பாடினார். ஒருமுறை வேலூரிலில் தங்கி இருந்த போது திருவண்ணாமலைக்குச் செல்ல விழைந்தார்.

அப்போது கள்ளர்கள் நால்வர் வந்து அவரின் முத்துப் பல்லக்கை பறித்துச் சென்றனர். இறைவன் தமக்களித்த முத்துப் பல்லக்கு பறிபோனதை எண்ணி சம்பந்தர் பெருமான் பெரிதும் வருந்தினார், அப்போது பிறப்பறுக்கும் ஈசனின் குரல் வானத்தில் பின்வருமாறு ஒலித்தது, "சம்பந்தா! முத்தப் பல்லக்கினை எம் ஆணையின் படி களவாடியவர்கள் எம் சிவகனங்களே. ஏனெனில், யார் ஒருவர் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் எம்மை வணங்க வந்தாலும் எவ்வித ஆடம்பரமுமின்றி எளிமையாகத் தான் வர வேண்டும். அவ்வாறு எளிமையாக திருவண்ணாமலைக்கு வருபவர்க்கே யாம் அருள்வோம். நீ திருவண்ணாமலையை வணங்கியவுடன் முத்துப் பல்லக்கு மீண்டும் உன்னை வந்தடையும்".

ஆதலால் தான் பல நூறு திருக்கோயில்கள் மேல் தேவாரப் பாடல்களை பாடிய எம் திருஞானசம்பந்த பெருமான், திருவண்ணாமலையின் மீது பாடும் போது மட்டும் தான், "அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!" என்றார்.
"இறைவனிடம் என்ன வேண்ட வேண்டும்?" - வள்ளலார் சொல்லிக் கொடுத்தது


ஒரு முறை அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரிடம் அவருடைய குரு பின்வருமாறு வினவினார்:

"இராமலிங்கம்! நீயோ முற்றும் துறந்த துறவி. இருப்பினும் இறைவனை ஓயாமல் வேண்டிக் கொண்டே இருக்கிறாய். அப்படி இறைவனிடம் ஓயாமல் என்ன தான் வேண்டுவாய்?"

இதற்கு உடனே அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமான் பின்வரும் பாடலை பதிலாகப் பாடினார்கள்:

ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்தம் உறவு கலவாமை வேண்டும்
பெருமைமிகு நின் புகழ் பேசியிருக்க வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மரு°உ பெண்ணாசை மறக்கவே வேண்டும்
உன்னை நான் மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேலே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முக தெய்வ மணியே!


இனி தன்னலமின்றி நாம் அனைவரும் இறைவனிடம் இதையே வேண்டுவோமா?

Historia de Silapathikaram - Una Epopeya Famosa del Idioma Tamil

  Fecha: 27 de Julio 2022 Soy una mujer de India que es una hablante de Tamil, el idioma muy antiguo.  La mayoria de los hablantes de Tamil ...